சிம்பி தானியங்கள் என்றால் என்ன தெரியுமா?


நம்முடைய முன்னோர்கள் ஒருசில தானியங்களை  சிம்பி தானியங்கள் என்று சொல்வார்கள்.  அது சரி  "சிம்பி " என்றால் என்ன ?  என்று தானே கேட்கிறீர்கள்..

அதாவது சிம்பி என்றால் " பொட்டி " என்று அர்த்தம். தானியத்தை உடைத்தால் பொட்டி போன்று இரண்டாக சமமாக பிளக்க முடியுமானால் அதற்கு சிம்பி தானியம் என்று பெயர்.

சிம்பி தானியத்திற்கு உதாரணமாக பச்சைப்பயிறு , பொட்டுகடலை உளுந்து,  மொச்சை,  சுண்டல் , தட்டைபயிறு முதலானவற்றை சொல்லலாம்.

பொதுவாக இந்த தானியங்கள்,  எளிதில் ஜீரணமாகாதவை ,  அதிக குளிர்ச்சி தன்மை கொண்டவை,  மேலும் இது உடலில் வாயுத்தொல்லையை அதிகரிக்கும் தன்மை கொண்டவை  என்பதால் இதை தினமும் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 இவற்றுள் பச்சைப்பயிறு மட்டும் விதிவிலக்கு . ஏனெனில் இது எளிதில் ஜீரணமாகும்,  கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் பாதுகாப்பை தரும்.

ஆனால் மொச்சை கொட்டையை அளவாக பயன்படுத்துங்கள் . சிம்பி  தானியங்களிலேயே அதிக அளவு வாயு தொல்லையை தரக்கூடியது இந்த மொச்சை . அதற்காக இதில் ஆரோக்கியத்திற்கு ஒன்றும் குறைவில்லை . அளவாக பயன்படுத்த வேண்டும் அவ்வளவுதான். 

மாதம் இரண்டு முறை மட்டும் மொச்சைக் கொட்டையை சாப்பிட்டால் பெரிதாக பிரச்சனைகள் இல்லை . முடிந்த அளவு வாயுத்தொல்லை உள்ளவர்கள் இதை  தவிர்ப்பது நல்லது.

சிம்பி தானியத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது  பொட்டுக்கடலை . இதை உடைத்தால் இரண்டாக சரிபாதியாக பிரியும். 

இந்த பொட்டுக்கடலையில் இறைச்சியில் உள்ள  அளவு புரதசத்து நிறைந்துள்ளது.  இதை அளவாக சாப்பிட்டால் நரம்பு மற்றும் தோல்களுக்கு நன்மை தரும்.

அதனால் சிம்பி தானியத்தை முடிந்தளவு அளவாக பயன்படுத்துங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.


                      நன்றி வணக்கம்

கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை