● மேலும் முடி மற்றும் நகம் இவை இரண்டுமே உருமாற்றம் பெற்ற தோல் தான்.
● நம்முடைய தலைமீதுள்ள தோலின் கீழே முடியின் வேர் இருக்கும், இங்குள்ள செல்கள் எல்லாமே தனித்தனியாக பிரிந்து பெருகி தோலின் வழியே வெளியே தள்ளப்படும்.
● அப்படி தள்ளப்படும் போது தலை முடியாக உருமாற்றம் செய்யப்பட்டு வெளியே வருகிறது.
● அப்படி வெளியே தள்ளப்பட்டு மேலே வரும்போது தலைமுடியில் இருக்கக்கூடிய செல்கள் இறந்து போய் விடும் . ஆனால் தோலின் கீழ் இருக்கும் முடியின் வேர் பகுதியில் உள்ள செல்களுக்கு உயிர் இருக்கும்.
● நாம் வெட்டும் தலைமுடிகள் அனைத்துமே இறந்துபோன செல்களால் ஆனது. அதனால் தான் நாம் முடியை வெட்டும்போது வலிப்பதில்லை.
● ஆனால் முடியை பிடித்து இழுக்கும் போதோ அல்லது தலைசீவும் போது முடி சிக்கிக் கொண்டாலோ அதிகமாக வலிக்கும் அதற்கு காரணம் , முடியை இழுக்கும் போது வேர்ப்பகுதையும் சேர்த்து இழுக்கப்படுகிறது .
● அந்த வேர் பகுதியில் இருக்கக்கூடிய முடி செல்களுக்கு உயிர் இருப்பதால் நம்மால் வலியை உணர முடிகிறது.
நன்றி வணக்கம்