சங்கிலை காடுமேடு, மலை, பள்ளங்கள் புதர்கள் போன்ற இடங்களில் வளரக்கூடியது. இதன் இலையின் நுனி மிகவும் கூர்மையாக இருக்கும் அதேபோல் இந்தச் செடியில் இலைகளும் முட்களும் சேர்ந்தே இருக்கும்.
இரண்டு கையளவு சங்கிலையை பறித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்கள் சீக்கிரமாக நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சங்கிலை மிகவும் உதவுகிறது. சங்கிலியை பறித்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து அதை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சங்கிலையுடன் அரை ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து அரைத்து. 3 முதல் 5 கிராம் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மையாகும்.
சங்கஞ் செடியின் வேர்ப்பட்டையை காய வைத்து பொடி செய்து 3 கிராம் அளவு எடுத்து தண்ணீருடன் கலந்து காலை மாலை என தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் .
எனவே சங்கிலையை இவ்வாறாக பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
நன்றி வணக்கம்
Arumaiyana pathuvu 💐
பதிலளிநீக்குthankyou bro
நீக்கு